‘சுயநல அரசியலை முடிவுக்குகொண்டு வர வேண்டும்’:சிராஜ் மஷூர்

Date:

இன்றைய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை பாதுகாக்கும் இடமாக மாற்றியுள்ளனர். மக்கள் அடிப்படை பிரச்சினைகளை வெளிக்கொணர்தற்காகவே இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றதாக சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சிராஜ் மஷூர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அக்கரைப்பற்று நகரில் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை வங்குரோத்தாக்கி மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குட்படுத்திய இந்த ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

அவர்களை நீதிக்கு முன்னே நிறுத்த வேண்டும். இந்த நாட்டின் உண்மையான மக்கள் அபிலாஷைகளை வென்றெடுக்கத்தான் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும் இங்கு ஒன்று திரண்டுக்கின்றது.

மேலும் அழகிய வளங்களைக் கொண்டுள்ள இந்நாட்டை இன்று மோசமாக நிலைமைக்கு தள்ளிய கள்வர் கூட்டத்தை மீண்டும் மீண்டும் தெரிவு செய்யாமல் நேர்மையான அரசியல் தவைர்களை தெரிவு செய்ய வேண்டும்.

அதேவேளை சுயநல அரசியலையும் கோழைத்தனமான அரசியலையும் முடிவுக்குகொண்டு வர அனைவரும் இணைந்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...