ஜந்து நேர தொழுகையை நிறைவேற்றியமைக்காக சிறுவர்களுக்கு கௌரவம்!

Date:

கொடேகொட மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசலால் தராவீஹ் மற்றும் ஜந்து நேர கடமையான தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியமைக்காக பள்ளி நிர்வாகத்தினரால் சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறார்களுக்கு தொழுகையை ஊக்குவிக்கும் முகமாக இந்த புனித ரமழான் மாதத்தில் ஐந்து நேர கடமையான தொழுகை மற்றும் தராவீஹ் தொழுகைக்காக வரும் சிறார்களை கண்காணித்து இந்த பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

யூசுப் பர்ஸான் மற்றும், ஹஸ்னி இன்ஷாப் ஆகிய இருவருக்கும் இந்த பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த சிறுவர்கள் இருவரும் முழுமையாக தராவீஹ் மற்றும் ஜந்து நேர கடமையான தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றியமைக்காக பள்ளி நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...