ஜனாதிபதி பதவி விலகினால் நாட்டை மீட்க ஒற்றுமையாக செயற்பட தயார்: சபையில் அனுர

Date:

நிதியமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு தேசிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகாத வரையில் அது பயனற்ற நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்றும் ஜனாதிபதி இன்னும் நாட்டை வழிநடத்தும் போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்க தேசிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பணம் அச்சடித்தல், இரசாயன உரத்துக்கு தடை, மூலப்பொருட்கள் இறக்குமதியை நிறுத்துதல் போன்ற தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுதான் தற்போதைய பொருளாதாரச் சரிவுக்கு காரணம் என்றார்.

மேலும், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தாங்கள் செய்த தவறை ஏற்றுக்கொண்டு தப்பிக்க முடியாது. இது ஒரு சிறிய தவறு அல்ல. இது ஒரு பாரதூரமான பிரச்சினை’ என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...