முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த போராட்டம் கொழும்பு கோட்டை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டிடத்திற்கு வெளியே இடம்பெறுகின்றது.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.
அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.