டீசல் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத தனியார் பேருந்துகள் இன்றும் இயங்குகின்றன!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 50 வீதமான தனியார் பஸ்களை இயக்க முடியும் என தனியார் பஸ் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், சில தூர பிரதேசங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பெற்றோல் நிலையங்களில் டீசல் விநியோகம் செய்வதில் பஸ்களுக்கு முன்னுரிமை வழங்கினால் பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ரயில்கள் வழமை போன்று இயங்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் வழமை போன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீP டி சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...