டீசல் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத தனியார் பேருந்துகள் இன்றும் இயங்குகின்றன!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 50 வீதமான தனியார் பஸ்களை இயக்க முடியும் என தனியார் பஸ் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், சில தூர பிரதேசங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பெற்றோல் நிலையங்களில் டீசல் விநியோகம் செய்வதில் பஸ்களுக்கு முன்னுரிமை வழங்கினால் பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ரயில்கள் வழமை போன்று இயங்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் வழமை போன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீP டி சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...