‘ட்ரோன் கேமராக்கள் மூலம் தகவல் அனுப்பியே எம்.பி.க்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்’: தினேஷ் குணவர்த்தன

Date:

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கிடைக்கப்பெற்றதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கு செல்லும் வழிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆளில்லா கேமராக்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் கூர்மையான திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவை வெளியாட்களால் செய்யப்பட்டவையே அன்றி பொது மக்கள் அல்ல எனவும் இதனைக் கண்டறிய பாராளுமன்றம் தலையிட வேண்டும் எனவும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இவற்றுக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஜனநாயக பாராளுமன்ற முறைமை வீழ்ச்சியடைந்து அராஜக நாட்டை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...