‘ட்ரோன் கேமராக்கள் மூலம் தகவல் அனுப்பியே எம்.பி.க்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்’: தினேஷ் குணவர்த்தன

Date:

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கிடைக்கப்பெற்றதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கு செல்லும் வழிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆளில்லா கேமராக்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் கூர்மையான திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவை வெளியாட்களால் செய்யப்பட்டவையே அன்றி பொது மக்கள் அல்ல எனவும் இதனைக் கண்டறிய பாராளுமன்றம் தலையிட வேண்டும் எனவும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இவற்றுக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஜனநாயக பாராளுமன்ற முறைமை வீழ்ச்சியடைந்து அராஜக நாட்டை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...