தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

Date:

இலங்கை தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

அதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, 90 வீதமான கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், எரிபொருள் நிரப்பும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் சாந்த சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...