‘திங்கட்கிழமை 40,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கை வந்தடையும்’:எரிசக்தி அமைச்சர்

Date:

நாளாந்தம் சராசரியாக 4,000 மெற்றிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 2,500 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் வெளியிடப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை, அனல்மின்நிலையம் புனரமைக்கப்படும் வரை ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஒட்டோ டீசல் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை மேலும் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்களில் இருந்து இறக்கப்பட உள்ளதாக அமைச்சர் இன்று டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருளின் தரம் தொடர்பில் 0115 234 234 மற்றும் 0115 455 130 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, நுகர்வோர் முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...