திருகோணமலையில் சந்தேகத்தின் பேரில் 15 க்கும் அதிகமானோர் கைது!

Date:

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 15 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலேயே இவ்வாறு கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீடுகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் பொலிசாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன இவ்வாறு கருத்து தெரிவித்தார்…..
“இவ்வாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அதுக்கோரள அவர்களின் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பொலிசாரினால் வரவழைக்கப்படும் இளைஞர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எனவும் இவ்வாறான கைதுகள் அரசின் சர்வாதிகாரத்தை வெளி காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் ஜனநாயகமான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என இளைஞர் யுவதிகள் வீதிக்கு இறங்கி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்கும் இவ்வேளையில் இவ்வாறான கைதுளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்த சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன.

மேலும் நாளைய தினம் திருகோணமலை நகரின் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்காக பொலிசரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன தெரிவித்தார்.”

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...