துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அதிகபட்ச பலத்தை பயன்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!

Date:

இன்று இரவு ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசேட பொலிஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்றும், தேவையில்லாமல் வீதிகளில் குழுக்களாக கூட வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.

கொள்ளை அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், தேவையான போது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சட்ட பலத்தை பயன்படுத்துமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கட்டுபெத்த, மொரட்டுவை மற்றும் இரத்மலானை விமான நிலையத்தை அண்மித்த பல பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்றை சோதனையிட்டுள்ளனர்.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதந்த பத்திரன உடனடியாக அந்த இளைஞர்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தலாம் எனவும், குறிப்பிட்ட காலத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.

அண்மையில், இடம்பெற்ற மோதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆகும்.

இதேவேளை, அண்மைக்காலமாக இடம்பெற்ற அமைதியின்மையின் போது ஏற்பட்ட தீயினால் 136 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...