தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம்: மஹிந்த அமரவீர

Date:

நெற்செய்கை பயிர்செய்ய தேவையான எரிபொருளை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய தெரிவு செய்யப்பட்ட 217 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இம்முறை பயிர்ச்செய்கைக்கு மேலதிக எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய பணிப்பாளர் நாயகம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை விவசாய அமைச்சரிடம் கையளித்ததையடுத்து, அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 நெல் விதைப்பதற்காக பருவம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதுடன், நாட்டின் அனைத்து விவசாயப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் எரிபொருள் கிடைக்காததால் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கமநல சேவை நிலையங்களின் அனுமதி கடிதத்தை அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சமர்ப்பித்து விவசாயிகள் தமது ஒவ்வொரு நெற்பயிர்களுக்கும் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...