‘தேவையான மருந்துகளை கொள்வனவு செய்ய பல நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது’:ருவான்

Date:

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டுக்கான மிக மோசமான காலம் இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வாக்குறுதியளித்த பணம் கிடைத்தவுடன் நாட்டுக்கு மருந்து விநியோகத்தை மீண்டும் தொடங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக, இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்ததாகவும், இந்தியாவிடமிருந்து சாதகமான கருத்துக்களைப் பெற்றதாகவும் கூறினார்.

சில மருந்துகளை கொழும்புக்கு வெளியில் உள்ள வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...