‘தேவையான மருந்துகளை கொள்வனவு செய்ய பல நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது’:ருவான்

Date:

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டுக்கான மிக மோசமான காலம் இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வாக்குறுதியளித்த பணம் கிடைத்தவுடன் நாட்டுக்கு மருந்து விநியோகத்தை மீண்டும் தொடங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக, இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்ததாகவும், இந்தியாவிடமிருந்து சாதகமான கருத்துக்களைப் பெற்றதாகவும் கூறினார்.

சில மருந்துகளை கொழும்புக்கு வெளியில் உள்ள வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...