‘நாளை முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்’

Date:

இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் சனிக்கிழமை (30) ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரித்துள்ளது.

தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் கோரும் 60வீத கட்டண திருத்தம் தமக்கு கிடைக்கவில்லை என வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் தாக்கம் நாளை முதல் உணரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது போக்குவரத்துச் செலவுகளை மீளாய்வு செய்யத் தவறியமைக்கு எதிராக நள்ளிரவு முதல் தொழிற்சங்கம் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டது.

எவ்வாறாயினும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வாகனங்களின் எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று நேற்றையதினம் எரிசக்தி அமைச்சர் எச்சரிகை விடுத்திருந்தார்.

எனினும் தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காது எவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தாலும் பணிக்கு திரும்ப மாட்டோம் என்று அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெட்ரோலியக்கூட்டுதாபனத்திற்கு எரிபொருளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் 80 வீதமானவை தனியாருக்கு சொந்தமானவையே.

இதனால் இவர் பணிகளில் இருந்து விலகினால் எரிபொருள் விநியோகத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...