‘நிபந்தனைகளை முன்வைப்பதற்கான நேரம் இதுவல்ல’:ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறினார் ஹரின்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக செயற்படப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் கட்சித் தலைமையுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடிய போதிலும் உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் இனி எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தன்னுடன் கூடிய பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான செயல்முறையை தாமதப்படுத்துவதால் தான் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக முடிவெடுத்ததாக ஹரின் தெரிவித்தார்.

மக்கள் ஆணையின் மூலம் ஆட்சியை பிடிப்பது சிறந்ததாக இருந்தாலும், அது போன்ற செயல்பாட்டிற்கான நேரம் இதுவல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிபந்தனைகளை முன்வைப்பதற்கான நேரம் இதுவல்ல என்று நான் சஜித்திடம் கூறினேன். நாம் முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும், அரசியல் ஸ்திரத்தன்மையை எவ்வாறு அடைவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

அவர் பிரதமர் பதவியை ஏற்றிருக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து இயல்புநிலையை ஏற்படுத்திய பின்னர் நிலைமைகளை உருவாக்க வேண்டும். எனினும் அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார்” என்று பெர்னாண்டோ கூறினார்.

மக்களுக்கான தீர்வை முதலில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் புதிதாக அமையும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...