நெருக்கடிக்கு அமைதியான தீர்வைக் காண வேண்டும்:சட்டத்தரணிகள் சங்கம்!

Date:

காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு வன்முறை மூலம் தீர்வு காணப்படாமல் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

இந்த முக்கியமான தருணத்தில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக தமது சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்துள்ள பிரேரணை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் அரசியல் நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு மக்கள் இந்த தருணத்தில் அமைதியான முறையில் செயற்பட வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...