பஸ் கட்டண அதிகரிப்பால் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிப்பு!

Date:

பஸ் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்று (30) பல ரயில்களில் இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்த காமினி செனவிரத்ன, மேலும் பல ரயில்களுக்கு நாளையதினம் இரண்டு கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அதிகரிப்பு மற்றும் தொலைதூரப் பகுதிகளிலுள்ள புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டுகள் தீர்ந்து போவதனால் புகையிரத நிலைய அதிபர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இன்று காலை பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட ‘ரஜரட்ட ரஜின’ புகையிரதம் பெலியத்த புகையிரத நிலையத்தில் நிரம்பியிருந்ததால் மாத்தறை புகையிரத நிலையத்தில் பல பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...