பாகிஸ்தானின் ஜின்னாஹ் புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் பிரதான மூன்று பாடங்களில் 3 ‘A’ சித்தியடைந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அதற்கமைய ‘A’ தர சித்தியை பெற்ற தகுதியுடைய இலங்கையின் அனைத்து இனங்களையும் சேர்ந்த அரச கல்வி நிறுவனங்களின் மாணவர்களிடம் கொழும்புல் உள்ள பாகிஸ் உயர்ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
விண்ணப்ப படிவங்களை இல, 42 புல்லர்ஸ் ஒழுங்கை கொழும்பு7 என் முகவரியில் உள்ள பாகிஸ் உயர்ஸ்தானிகராலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது விண்ணப்பப் படிவங்களை https://www.pakistanhc.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்யலாம்.
புலமைப்பரிசிலுக்காக முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பின்வரும் மின்னஞ்சல் தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: Pahiccolombo@mofa.gov.pk
தபால் முகவரி: பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், இல 42- 44 புல்லர்ஸ் ஒழுங்கை, கொழும்பு07
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கடைசித் திகதி 30 மே.2022 ஆகும்