பாராளுமன்றத்திற்குள் அரசியல் விளையாட்டு: சஜித்

Date:

அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் அரசியல் விளையாட்டை நடத்துவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் பிரதி சபாநாயகராக சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியமபலபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பிலே அவர் இவ்வ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, அரசாங்கம் அரசியல் விளையாட்டை விளையாடுகிறது என்பதை இன்றைய வாக்கெடுப்பு தெளிவாகக் காட்டுகிறது.

அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறும், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களை அகற்றுமாறும், அனைத்து தலைமைகளையும் அகற்றுமாறும் கோரி நாட்டின் பொதுமக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.

இந் நிலையில், இன்று பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கக் கூட்டணிக்குள் உள்ள ஒருவருக்கு வாக்களித்துள்ளனர். போராட்டத்தின் குரல் குறித்து அரசாங்கம் கவலைப்படவில்லை என்பதையே இது நிரூபித்துள்ளது’ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கெடுப்பின் மூலம் பலரின் வேஷங்கள் வெளியாகின, மொட்டு கட்சியின் ஆதரவு ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்தே தாம் தமது முடிவை மாற்றிக்கொண்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்க கட்சியின் கைப்பொம்மையாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய செயற்படுகிறார் என்பது இன்று வெளியானது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...