பாராளுமன்றம் அருகே போராட்டம் நடத்திய 13 பேரும் பிணையில் விடுதலை!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பேருக்கும் கடுவெல நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நுழைவாயில் வீதியில் அத்துமீறி நடந்து கொண்டமைக்காக குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்த பின்னர், பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியவுடன் குழு தமது எதிர்ப்பை ஆரம்பித்தது.

பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குழுவை கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்திய பின்னர் பிணையில் விடுவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகரகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...