‘பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் இன்னும் தீர்மானமில்லை’ :தினேஷ்

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பிரதமர் இன்று (5) அல்லது நாளை (6) அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் நடத்திய சந்திப்பிலேயே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசியலமைப்பு ரீதியாக சாத்தியம் உள்ளதா? என்பது குறித்து சபாநாயகர் தீர்மானிப்பார் எனவும், கட்சித் தலைமைக் கூட்டத்தில் இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனவும் குணவர்தன தெரிவித்தார்.

எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அரசாங்கத்தைப் பாதுகாக்க அனைத்து உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...