புதிய அரசாங்கத்தை அமைக்க தயார்: ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நிபந்தனைகள்!

Date:

புதிய அரசாங்கத்தை அமைக்க 4 நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டைக் கைப்பற்றத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் கடினமான மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக உரிய விடயங்களுக்கு உட்பட்டு நாட்டைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய முதலாவதாக, குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்., இரண்டாவதாக, புதிய அரசாங்கத்தின் பணிகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாது, மூன்றாவதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும், கடைசியாக, பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...