பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கை திரும்பினார்!

Date:

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட கத்தோலிக்க பேராயர் குழு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஏப்ரல் கடந்த 22ஆம் திகதி வத்திக்கானுக்கு புறப்பட்டனர்.

அவர்கள் இன்று காலை 9.12 மணிக்கு கத்தாரின் தோஹா வழியாக இலங்கை வந்தடைந்தார்கள்.

வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிலவும் நெருக்கடிக்கும் ஆசீர்வாதங்களை வேண்டி, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...