போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முடியாது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

Date:

சட்டப்பூர்வமான போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள நிலைமை மோசமடைந்துள்ளமை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அரசாங்கம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதப்படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போராட்டம் நடத்தும் உரிமையை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துபவர்களை கைது செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மதிக்கப்பட வேண்டும், ஆதரிக்கப்பட வேண்டும், இதுபோன்ற போராட்டங்கள் எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...