(File Photo)
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இன்று மே 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக மஹிந்த வருகை தந்ததுடன் கடந்த மே 9-ஆம் திகதி இராஜினாமா செய்த பிறகு அவர் பொதுவில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.
ஆளும் கட்சியின் நான்காவது முன் ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவுக்கு அருகில் முன்னாள் பிரதமர் மஹிந்த அமர்ந்தார்.
மகிந்தவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அரசாங்கம் அச்சம் தெரிவித்ததை அடுத்து, திருகோணமலை கடற்படை முகாமிற்கு மஹிந்த கொண்டு செல்லப்பட்டார்.