மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பிக்கை பறிபோகும்:இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்

Date:

மக்களின் குரலை புரிந்து கொள்ளாவிட்டால் பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மை இழக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தேர்தலின் பின்னர் பாக்கீர் மாக்கார் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிரதி சபாநாயகர் தேர்தலில் எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இந்த சபை நம் நாட்டு மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தும் மையமாகவும், குறுக்கு வழியாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நம்பகத்தன்மையை தக்கவைக்க முடியாவிட்டால் அது கேள்விக்குறிதான். தற்போதைய ஆட்சிக்கு எதிரான கருத்து இருக்கும்போது இந்த வாக்கைப் பயன்படுத்துவது புரிந்துகொள்ள முடியாதது.

பொதுமக்களின் கருத்தை எதிர்கொள்ளும் வகையில் துணிச்சலை வெளிப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...