தற்போதைய மருந்து பற்றாக்குறை நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்குமாறு இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் அலகா சிங்கிடம் பிரதமர் ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (24) இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.
இதன்போதுஉலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான உதவித் திட்டத்தின் முதல் படியாக 2 மில்லியன் டொலர்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதாக உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையானது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் டாக்டர் அலகா சிங் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகையில்,
இலங்கையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய ஆதரவிற்கும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் உட்பட பல நாடுகளின் ஆதரவிற்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும், சுகாதார காப்புறுதியில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியை கோரியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் ருவான் விஜேவர்தன, சுகாதார அமைச்சின் இணைப்பாளரும் தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளருமான டாக்டர் அன்வர் ஹம்தானி ஆகியோரும் கலந்துகொண்டனர்.