மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: சமல் ராஜபக்ஷ!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதி பதவி முடிவடையும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், “பதவிகளை விட்டுக்கொடுக்க ஒருவர் தயாராக இருக்க வேண்டும். காலி முகத்திடலிலும், அலரிமாளிகைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, பொலிஸ் மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் தடுக்கத் தவறிவிட்டனர். அதனால் அவர்கள் திடீரென ஆத்திரமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்காமல் ஐ.ஜி.பி.யும் பாதுகாப்புச் செயலாளரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது” என தெரிவித்தார்.

மேலும், அரசாங்க அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...