முன்னாள் பிரதமர் மஹிந்தவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் !

Date:

மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் புதன்கிழமை (25) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் 2 சட்ட அமுலாக்க அதிகாரிகள் உட்பட 10 பேரின் உயிரைப் பறித்த நாடு தழுவிய வன்முறையாக மாறியது.

நேற்று மாலை மகிந்த கொழும்பிலுள்ள வீட்டுக்கு சென்ற குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல் அதற்கு முன்னர் மகிந்த தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளிட் விடயங்கள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்காக முன்னர் மே 9 அன்று அலரி மாளிகைகளில் பிரதமர் தலைமையில் ஆதரவாளர்கள் சந்திப்பிற்கு பிறகு அதில் கலந்து கொண்ட சிலரால் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...