முன்னாள் பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மகிந்த மீது பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இதன்படி, முன்னாள் ஜனாதிபதி பயணிக்கும் இடங்களிலும், அவரது நிரந்தர வதிவிடத்திலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் சாத்தியம் காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்பதால் அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பை வழங்குவது சரியான நேரத்தில் என புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் இதன்படி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 07, பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையில் வீதித் தடைகளை அமைக்குமாறு மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஓய்வுபெற்ற ‘ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு 05’ விடுத்த எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத் புளோட்டிலாவை கண்காணிக்கும் துருக்கி ட்ரோன்கள்

இஸ்ரேலின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத்...

காசா போர் முடிவுக்கு வருமா? இன்று டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி...

இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...