மே 1 முதல் 4 வரையிலான மின்வெட்டு அட்டவனை!

Date:

இன்றும் (மே 1) நாளை மறுதினமும் (மே 3) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே 1 ஆம் திகதி மே தினம் மற்றும் 3 ஆம் திகதி ரமழான் பண்டிகை வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மே 2 மற்றும் மே 4 ஆம் திகதிகளில் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A முதல் L வரையிலான பகுதிகளிலும், B முதல் W வரையிலான மண்டலங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டு மணி நேரம் மின்சாரம் இருக்காது.

மேலும், அந்த பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேலும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும்.

இதற்கிடையில், CC மண்டலங்களில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை 3 மணி நேரம் மின் தடை ஏற்படும்.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...