ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்ததாக கூறப்படும் முடிவு குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரணில் பாராளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே மற்றும் அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கட்டளையிடவில்லை. இந்த நியமனம் சட்டபூர்வமானது அல்ல, தற்போது இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் தீர்வு இதுவல்ல’ என்று அவர் கூறினார்.
மேலும், அரசியலில் தோற்கடிக்கப்பட்ட மற்றும் மக்களால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு நபரை அல்ல, மரியாதைக்குரிய நேர்மையான நபரையே மக்கள் விரும்புகிறார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
‘மகாநாயக்க தேரர் கட்சி சார்பற்ற நபரை பரிந்துரைக்கின்றனர். அந்த பரிந்துரை என்ன ஆனது என்பது அனைவரின் யூகமாக உள்ளது.
தற்போதைய நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், இந்த அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை எனவும் அவர் தெரிவத்துள்ளார்.
அதேவேளை இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு பக்கச்சார்பற்ற நபரால் மட்டுமே இது நிகழ முடியும்.
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் அந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும், அந்தக் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்றும், மதகுருமார்களின் குரலுக்கு மதிப்பளிப்பார் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த நாட்டில் உள்ள மக்கள் நல்ல நேர்மையைக் கொண்ட ஒருவரையே விரும்புகிறார்கள், தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒருவரை அல்ல.
மேலும் ஆட்சியில் நீடிப்பது நாடகம் என்று குற்றம் சாட்டிய அவர், ரணிலை பிரதமராக ஏற்க மாட்டோம் என்றும் பேராயர் கூறினார்.
இதேவேளை, இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் நடவடிக்கைக்கு முக்கிய மதத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஓமல்பே சோபித தேரர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘இந்த நியமனம் தற்போது மக்கள் விரும்பும் தீர்வு அல்ல, வெற்றிடமாக இருந்த பிரதமர் பதவியை நிரப்ப ரணில் விக்கிரமசிங்க பொருத்தமானவர் அல்ல என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தமை, சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை புறக்கணிக்கும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.