திருகோணமலை நகரில் முழுமையான ஊரடங்கு அமுல்!

Date:

திருகோணமலை கடற்படை தளத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாக்க வேண்டாம் என்பதுடன் அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பொது மக்கள் நேற்று காலை முதல் மாலை வரை அர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
எனினும், அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு சட்டம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு தத்தமது வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருகோணமலை நகர் பொது மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடிக் காணப்படுவதுடன் குறித்த கடற்படைத்தளத்திற்கு பிரவேசிகக் கூடிய வீதிகள் அனைத்திலும்வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினரது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...