திருகோணமலை நகரில் முழுமையான ஊரடங்கு அமுல்!

Date:

திருகோணமலை கடற்படை தளத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாக்க வேண்டாம் என்பதுடன் அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பொது மக்கள் நேற்று காலை முதல் மாலை வரை அர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
எனினும், அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு சட்டம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு தத்தமது வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருகோணமலை நகர் பொது மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடிக் காணப்படுவதுடன் குறித்த கடற்படைத்தளத்திற்கு பிரவேசிகக் கூடிய வீதிகள் அனைத்திலும்வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினரது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...