சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் சாலை தடுப்புகளை அமைத்ததை எதிர்த்தும், சாலை மறியலில் ஈடுபடுவதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர என்ற நபரால் இந்த மனு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், பொலிஸ் மா அதிபர், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பொலிஸாரினால் அமைக்கப்பட்ட ஸ்பைக்களுடன் கூடிய சாலைத் தடைகள், சாலைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன, நிரந்தரத் தடுப்புகளை நிறுவுதல் மற்றும் அலரிமாளிகை அருகே நடைபாதையைத் தடுப்பது குறித்த விடயங்களை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த கட்டுப்பாடுகள், ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் சித்திரவதைக்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்று அவர் மேலும் கூறினார்.
இதனால், போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து சாலைத் தடைகளையும் அகற்ற நீதிமன்ற உத்தரவை மனுதாரர் கோரியுள்ளார்.
மேலும், வீதித் தடைகளை அமைப்பதற்கு முன் உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெறுமாறு பொலிஸாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், அவற்றை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.