மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட நோயாளி!

Date:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசலகூடத்தில் வைத்து நேற்றிரவு (22) தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஒரு மனநோயாளி என்றும் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டுச் சென்றதன் பின்னர் குறித்த நபர் மலசலகூடம் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததையடுத்து, அவருக்கு உதவியாக இருந்த உறவினர் கதவைத் திறந்து போது, உடுத்திருந்த சாரத்தைப் பயன்படுத்தி, மலசலகூட ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...