மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட நோயாளி!

Date:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசலகூடத்தில் வைத்து நேற்றிரவு (22) தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஒரு மனநோயாளி என்றும் அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டுச் சென்றதன் பின்னர் குறித்த நபர் மலசலகூடம் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததையடுத்து, அவருக்கு உதவியாக இருந்த உறவினர் கதவைத் திறந்து போது, உடுத்திருந்த சாரத்தைப் பயன்படுத்தி, மலசலகூட ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...