ஹரின்-மனுஷ ஆகியோர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளும் கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அமைச்சரவை அமைச்சுக்களை பொறுப்பேற்றனர்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவை பதவிகளை ஏற்கும் தீர்மானம் தமது அரசியல் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் எனினும் அவர்கள் நாட்டின் வெற்றிக்காக பந்தயம் கட்டுவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...