ஹரின்-மனுஷ ஆகியோர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளும் கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அமைச்சரவை அமைச்சுக்களை பொறுப்பேற்றனர்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவை பதவிகளை ஏற்கும் தீர்மானம் தமது அரசியல் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் எனினும் அவர்கள் நாட்டின் வெற்றிக்காக பந்தயம் கட்டுவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...