20 இற்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைப்பு: ‘இனி அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்பட மாட்டாது’

Date:

இனி அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

ஆங்கில ஊடகடொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் அலரிமாளிகையில் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு மாத்திரம் பணம் வழங்குவதாகவும் சிலருக்கு தனிப்பட்ட இலாபத்திற்காக மட்டுமே வழங்குவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக பஸ்களை வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மற்றும் அதில் இருந்தவர்கள் கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 20 இற்க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...