20 இற்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைப்பு: ‘இனி அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்பட மாட்டாது’

Date:

இனி அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

ஆங்கில ஊடகடொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் அலரிமாளிகையில் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு மாத்திரம் பணம் வழங்குவதாகவும் சிலருக்கு தனிப்பட்ட இலாபத்திற்காக மட்டுமே வழங்குவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக பஸ்களை வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மற்றும் அதில் இருந்தவர்கள் கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 20 இற்க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...