வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தல் உள்ளிட்ட பொலிஸ் கடமைகளுக்காக நாய்க்குட்டிகளை பெற்றுக் கொள்வதற்காக 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த நாய்களில் ஒன்று சுமார் பத்து லட்சம் ரூபா பெறுமதியானது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் வழங்கல் சேவை பிரிவு இந்த நாய்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி 2019 முதல் ஆதாரங்களின் படி, அதிகாரப்பூர்வ நாய்கள் மற்றும் குதிரைகளை வாங்கவில்லை.
இதேவேளை இந்த நாய்கள் மற்றும் நாய்க் குட்டிகளிடம் இருந்து நாய்க்குட்டிகளைப் பெற்று பல்வேறு பொலிஸ் கடமைகளுக்கு பயிற்சி அளிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.