‘அனுரகுமாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ :பிரதமர் அலுவலகம்

Date:

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யோஷித ராஜபக்ஷவை பொய்யான தகவல்களால் அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி (மே3) ஸ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் ஜே.வி.பி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்ட சில உறுதிப்பத்திர எண்கள் மற்றும் காணிகளின் பெயர்களை முன்வைத்து யோஷித ராஜபக்ஷவை அவமதிக்கும் வகையில் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் பிரதமர் அலுவலகம் குறித்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (3) இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பான 100 க்கும் மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சுமார் 31 சொத்துக்களின் பட்டியலை அநுர குமார திஸாநாயக்க வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...