ஆசிரியர் ஒருவர் வயல் வெளியில் இருந்து சடலமாக மீட்பு: மண்டூரில் சம்பவம்!

Date:

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் இருந்து ஆசிரியர் ஒருவர் நேற்று மாலை (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டூர் பிரதேசத்தைச்சேர்நத (48) வயதுடைய பூபாலபிள்ளை சசிகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவ தினமான நேற்று பாடசாலை விடுமுறை என்பதால் தனது மதிய போசண உணவினை உண்டு விட்டு தனது வயலினை பார்வையிடுவதற்காக சென்றவர் நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரின் வயல் பிரதேசத்தில் மரணமடைந்த நிலையில் காணப்பட்டதனை அவதானித்த நபர் ஒருவர் அவரின் வீட்டாருக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...