ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதத்தால் அதிகரிப்பு!

Date:

ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார தளம்பல் நிலை காணப்படுகின்ற போதிலும், ஆடைத் தொழிற்துறை வலுவான நிலையில் உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆண்டின் முதல் காலாண்டில், ஆடைத் தொழிற்துறையின் வருமானம், 1.5 பில்லியன் டொலர் வரையில் அதிகரித்து, தற்போழுது 10.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எவ்வாறிருப்பினும், அந்த வளர்ச்சி வீதத்தில், மார்ச் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும், ஏப்ரலில் 445.79 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...