ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதத்தால் அதிகரிப்பு!

Date:

ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார தளம்பல் நிலை காணப்படுகின்ற போதிலும், ஆடைத் தொழிற்துறை வலுவான நிலையில் உள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆண்டின் முதல் காலாண்டில், ஆடைத் தொழிற்துறையின் வருமானம், 1.5 பில்லியன் டொலர் வரையில் அதிகரித்து, தற்போழுது 10.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எவ்வாறிருப்பினும், அந்த வளர்ச்சி வீதத்தில், மார்ச் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும், ஏப்ரலில் 445.79 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்ற காதி நீதிபதிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறை

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ (All Ceylon YMMA Conference) பேரவையின் அனுசரணையுடன்,...

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- பங்களாதேஷ் பிரதமருக்கிடையில் விசேட சந்திப்பு: சுற்றுலா, மருந்து உற்பத்தித்துறை குறித்து பேச்சு.

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை...

நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது...

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...