‘இலங்கை கடுமையான உணவுப் பற்றாக்குறையை சந்திக்கப் போகிறது’: சஜித்

Date:

எதிர்காலத்தில் இலங்கை கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளப் போவதாகவும், உணவு மற்றும் விவசாய அமைப்புடன் அரசாங்கம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன், இலங்கை எதிர்காலத்தில் கடுமையான உணவுப் பற்றாக்குறையை சந்திக்கப் போகிறது.

அரசாங்கம் உணவு மற்றும் விவசாய அமைப்பு, UNICEF, UNFP, உலக உணவுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகத் தொடர்பு கொண்டு இதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டின் பொதுமக்கள் பட்டினியால் வாடுவதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஒரு முன் ஏற்பாட்டை இப்போதே தயாரிக்கப்பட வேண்டும், என்று சஜித் தெரிவித்துள்ளார்.

மேலும் அவசர அவசரமாக மருத்துவ மருந்து தட்டுப்பாடு குறித்து நிதியமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘தற்போது நாம் எதிர்நோக்கும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து நிதி அமைச்சருக்குத் தெரிவிக்க வேண்டும். பல அத்தியாவசிய மருந்துகள் இப்போது நாட்டில் இல்லை.

மேலும், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறையால் பல அறுவை சிகிச்சைகள் தாமதமாகி வருகின்றன. இதை இனி ஏற்க முடியாது. மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...