இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கை!

Date:

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் ஆனால் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டவுடன் கொள்கைப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குத் தயாராகும் வகையில் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் திட்டமிட்டபடி இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் வன்முறைகள் தொடர்பிலும் அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டுத் தலைவர் மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.

அத்தோடு ‘அதிகரிக்கும் சமூக பதற்றங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து தாம் அக்கறை கொண்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான ‘தொழில்நுட்ப மட்ட’ கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன, புதிய இலங்கை அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கை விவாதங்களுக்கு தயாராக இருக்கும் வகையில் தொடரும் என நோசாகி கூறினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...