‘இளைய தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் அரசியலே தேவை’: டலஸ்

Date:

குடும்பத்தை மையமாகக் கொள்ளாமல், இளைய தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும், நாட்டைப் பற்றி அக்கறை கொண்ட, அரசியல் இயக்கம் தேவை என முன்வைப்பதன் மூலமே நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முதல் படியாக அரசாங்கத்தரப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும் சுமார் இரண்டு வருடங்களாக பேணி வந்த ஆணவம், சுயநலம் ஆகியவற்றை ஒதுக்கி வைப்பதே நல்லது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மக்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரியும் இந்த நேரத்தில், அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் உரையாடல்கள் 113 பெரும்பான்மை மீது அல்ல, 22 மில்லியன் இலங்கையர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

நாட்டை விட்டு வெளியேறும் வேளையில் கட்சிக்கு அடிமையாக இருக்காமல், பொது மக்களை நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பதற்கு சகல உதவிகளையும் வழங்குவதே தமது கொள்கை எனவும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...