ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்:முஸ்லிம் மீடியா போரம்

Date:

ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் சந்தேக நபர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் வேண்டிக் கொள்கின்றோம் என ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை தோப்பூர் ஊடகவியலாளர் முஹம்மது நகீம் முஹமட் புஹாரி தாக்கப்பட்டமையைக் கண்டித்து விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சனிக்கிழமை மூதூர் பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர் முஹம்மது நகீம் முஹமட் புஹாரி ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதோடு, அக்குழுவினரால் அவரது கையடக்க தொலைபேசி பறிமுதல் செய்ததுடன் பின்னர் அதனை அவரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவரது ஊடக செயற்பாடுகளுக்கும் குந்தகம் ஏற்படுத்தியுள்ளனர்.

ஊடகவியலாளர் புஹாரி, தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விடயம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதை ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதோடு இதனோடு தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் வேண்டிக் கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...