எதிர்க்கட்சி தலைவர் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேச்சு!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டென்னிஸ் சாய்பி, ஜேர்மன் குடியரசின் இலங்கை தூதுவர் ஹோல்கர் லோதர் சைபர்ட், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவத்து, நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங் கிரிஃபித் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சந்துள்ளனர்.

இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவிகளை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...

சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் இலங்கைக்கு 3ஆவது இடம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் வாழ்த்து!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற...