எரிபொருளைக் கொண்டு செல்ல பொலிஸ் பாதுகாப்பு தேவை: தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள்

Date:

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது என பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (22) சராசரியாக 3,600 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழமையான நாட்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகம் நடைபெறாது. எவ்வாறாயினும், இன்றும் எரிபொருள் விநியோகம் தொடர்கிறது, குறிப்பாக 92 ஒக்டேன் பெற்றோலின் விநியோகம் தொடர்கிறது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...