கடல் வழியாக இந்தியாவுக்குள் செல்ல முயன்ற மேலும் 13 பேர் கைது!

Date:

யாழ்ப்பாணம், பலாலி கடற்பகுதியைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 13 பேரையும் 2 படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை தில்லைநகரில் இருந்து பலாலி பகுதிக்கு வந்து பின்னர் பலாலி பகுதியில் இருந்து இரண்டு படகுகளை பயன்படுத்தி பலாலி கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் பலாலி கடற்பகுதியில் ஊர்வலமாகச் சென்ற போது வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இரண்டு படகுகள் மற்றும் எரிபொருள் ஒரு தொகுதியுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பலாலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் மற்றும் பலாலி பகுதியைச் சேர்ந்த படகு உரிமையாளர்கள் இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...