சபாநாயகரின் அலுவலகத்திற்குள் புகுந்த எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் பதற்றம்!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்தனர்.

நேற்று மாலையில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கான திகதியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்தும் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர்.

அதேவேளை உறுப்பினர்கள் நம்பிக்கையில்ல பிரேரணை மீது விவாதம் செய்வதற்கான திகதியை வழங்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது, ஆனால் பதவி நீக்க பிரேரணைக்கு இல்லை என்றும் கூறினர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...