சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய சந்தேக நபர் கைது!

Date:

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய திருமணமான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும் குற்றம் தொடர்பாக பொலிஸாரால் உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமியின் பிரதே பரிசோதனை அறிக்கையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பாக பல வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை விசாரணைகள் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளன.

வெள்ளிக்கிழமை காணாமல் போன சிறுமியின் சடலம், அட்டுளுகமவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய 4 குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரதேசத்தில் பலரிடம் பொலிஸார் வாக்குமூலங்கள் பதிவு செய்கின்றது.

Popular

More like this
Related

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...